உன்னை காண நேர்ந்தது
சில சந்தர்ப்பங்களில்
எனை உன் வசம்
இழுத்தாய் அத்தருணங்களில்
- தேடினேன் உன்னை
அந்த வாய்ப்பு
பிறகு ஏற்படவில்லை
இருந்தும் நீ என்
மனத்தை விட்டு நீங்கவில்லை
- தேடினேன் உன்னை
உன்னை எனக்கு
முழுதும் தெரியாது
இருந்தும் என்னுள்ளம்
உன்னை பிரியாது
- தேடினேன் உன்னை
யாவரையும் கவரும்
உனது இளமை
மனத்தில் நிறையுமே
அதன் இனிமை
உணர்விற்கு இதமளிக்கும்
உன் மென்மை
- தேடினேன் உன்னை
உன்னை மறுபடி காண
நினைத்தது மனம்
உன்னை தேடி
அலைகிறேன் முதல் அக்கணம்
- தேடினேன் உன்னை
உன்னால்
கவியாய் ஆனவாரோ பலர்
உன் மேல்
பைத்தியமானவரும் உளர்
- தேடுகிறேன் உன்னை
வளர்ந்த இடத்தில்
நீ இல்லை
பிறந்த இடத்தில்
உன் சுவடு இல்லை
கிடைப்பாய் என்றே
தோன்றவில்லை
இருந்தும் உன்னை
விட மனமில்லை
- தேடுகிறேன் உன்னை
அகப்பட
மாட்டாயோ ஒரு தினம்
உன்னை நாடி
துடிக்குது என் மனம்
தேடினேன் உன்னை
தேடுகிறேன் உன்னை
நீயோ என்
கண்ணில் படவில்லை
இப்போதும் என்
மனம் தளர்வதில்லை
தேடுவேன் உன்னை
என் செந்தமிழே!!!
என் செந்தமிழே!!!
-நா.சரவணன்